தேசிய போக்குவரத்து ஆணையத்தின் மக்களுக்கான அதிரடி தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் மக்களுக்கான அதிரடி தகவல்!

அரசாங்கத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்துக் கொள்கையின் விதிகளின்படி செயற்படாத பஸ்கள் குறித்து ஆராய சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

அதன்படி, பஸ்களின் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள், டிக்கெட் வழங்காத பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனைத்து அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

இதற்கிடையில், இது போன்ற தவறுகளைக் கண்டவுடன் 1955 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு குறித்த பஸ் இலக்கங்களைக் குறிப்பிட்டு பொதுமக்கள் புகார் செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.