கொழும்பில் 30,000 கொரோனா தொற்றாளர்கள்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் 30,000 கொரோனா தொற்றாளர்கள்!!!

கொழும்பு நகரில் நேற்றையதினம் மாத்திரம் 2850 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ரூவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

அந்த எண்ணிக்கை போன்ற நான்கு மடங்கான கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் நடமாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

கொழும்பில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட 400 PCR பரிசோதனைகளில் 19 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததன் மூலம் இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த எண்ணிக்கையை கணக்கிட்டு பார்த்தால் 5 வீதமாகும். அதனை 6 இலட்சம் மக்களுக்கு மதிப்பிட்டு பார்த்தால் 30000 பேர் கொரோனா தொற்றுடன் நடமாட கூடும்.

அந்த 30000 பேருக்குள் வைரஸ் உள்ள போதிலும், அவர்கள் அதனை பரப்புவதாக கூறு முடியாது.

எப்படியிருப்பினும் இது ஆபத்தான நிலைமை என்பதனை நாங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
$ads={2}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.