இலங்கையில் மேலும் 270 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
$ads={2}
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 468 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,695 ஆக அதிகரித்துள்ளது.