VIDEO: கஞ்சா ஏற்றுமதி செய்வதன் மூலம் 2025இல் நாட்டின் முழு கடனையும் திருப்பி செலுத்தலாம்! -பந்துல

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: கஞ்சா ஏற்றுமதி செய்வதன் மூலம் 2025இல் நாட்டின் முழு கடனையும் திருப்பி செலுத்தலாம்! -பந்துல


இலங்கையில் கஞ்சா பயிரிடுவதால் 2025 க்குள் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


தேசிய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


புதிய கஞ்சா செடி பயிர்ச்செய்கை செய்து, அதனை மருத்துவ நுகர்வுக்கு உள்ளநாட்டு பாவனைக்கு பதிலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவு அந்நிய செலாவணியினை ஈட்ட முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


மேலும், எமது நாட்டின் வெளிநாட்டுக் கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என நான் எப்போதும் எண்ணி ஆச்சரியப்படுவது உண்டு. நாங்கள் இதனை செய்தால், 2025 க்குள் எங்கள் கடன்களை முழுமையாக திருப்பிச் செலுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.


குறித்த கஞ்சா வளர்ப்பு செயற்பாட்டினை இராணுவம் மற்றும் எஸ்.டி.எஃப் உதவியுடன் வளர்த்து பாதுகாக்க முடியும், இதனால் ஒரு செடிக் கூட வெளியே செல்லாது. பின்னர் ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் அத்தியாவசிய எண்ணெய் மற்றும் மருந்துகளை பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கலாம்.” என அமைச்சர் கூறினார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.