கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன! - பரிஸ் ஹடாட் ஸர்வோஸ் தெறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா கட்டுப்படுத்தலில் இலங்கையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன! - பரிஸ் ஹடாட் ஸர்வோஸ் தெறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெற்றிகரமானவையாக அமைந்துள்ளதாகவும், அதற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பரிஸ் ஹடாட் ஸர்வோஸ் தெரிவித்திருக்கிறார்.


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை நேற்று (27) சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 


$ads={2}


உலகின் ஏனைய நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ள வேளையில், இலங்கையின் சுகாதாரப்பிரிவு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பரிஸ் ஹடாட் இதன்போது சுட்டிக்காட்டினார்.


அதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது உலக வங்கியினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு சுகாதார அமைச்சர் தமது நன்றியை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.