இன்று முதல் அமுலுக்கு வரும் அதிரடி சட்டம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் அமுலுக்கு வரும் அதிரடி சட்டம்!!!


இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 221 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் 1480 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 218 வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த 14ஆம் திகதி தனிமைப்படுத்தல் சட்டத்தை செயற்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த அவகாச காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

அதற்கமைய இன்று முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள், முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


அதற்கமைய இவ்வாறான குற்றச்சாட்டில் 39 பேர் முதல் முறையாக கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக முன்னெடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.