ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் புதிய திட்டம் கவனத்தில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் புதிய திட்டம் கவனத்தில்!

ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வீடுகளுக்கு சென்று கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் நிலைமைகளை கருத்திற் கொண்டு அத்தியாவசிய சேவைகளை காத்திரமான முறையில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


$ads={2}

மிகவும் நெருக்கடியான நிலைமைகளிலும் மின்சாரம், நீர், எரிபொருள், சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை இடையறாது வழங்குவதற்கான திட்டங்களை வகுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டின் சிரேஸ்ட பிரஜைகளை பாதுகாப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென பசில் ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஓய்வூதியத்தை வீடுகளுக்குச் சென்று கொடுக்கக்கூடிய ஓர் முறைமை குறித்து கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அதற்கான திட்டமொன்றை வகுக்குமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.