பண்டாரவளையில் ஞாயிறு சந்தை மறு அறிவித்தல் வரையில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை மக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழமையாக வாரம் தோறும் நடைபெறும் ஞாயிறு சந்தை விற்பனைகளை மறுஅறிவித்தல் வரையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை நகரபிதா ஜனக நிசாந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
$ads={2}
வெல்லவாய, ஹப்புத்தளை மற்றும் வெலிமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான வர்த்தகர்கள் பண்டாவரளை ஞாயிறு சந்தைக்கு பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் எண்ணிக்கையிலான நுகர்வோரும் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தைக்கு வருகை தருவதனால் சந்தை செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.