சவூதி அரேபியாவிலுள்ள பிரான்ஸ் துணைத் தூதரகம் ஒன்றின் பாகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கத்தியினால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளார்.
$ads={2}
ஜெத்தா நகரிலுள்ள பிரான்ஸ் துணைத் தூதுரகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார் என சவூதி அரேபியாவிலுள்ள பிரான்ஸ் துதரகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய பிரஜையொருவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் சவூதி அரேபிய பாதுகாப்புப் படையினரால் உடனடியாக மடக்கிப்பிடிக்கப்பட்டார் எனவும் அத்தூதரகம் தெரிவித்துள்ளது.