![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsdx6GM_usZ210VeH-BkzaLNnqywmAYAB5MOBi39P6dTPJ1ILoF_srW4M71o8whdGjVsAc3zu7am6dWJ65g6LMRlpblDXJwt3o_N2QQUOUgzECewkiSKt2ezR6uBEZrsZiNFI4jQU2KIQ/s16000/sri+lankan+airlines.jpg)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 470 இலங்கையர்கள் இன்று (03) காலை நாட்டை வந்தடைந்தனர்.
அந்தவகையில் அபுதாபியில் இருந்து 400 இலங்கையர்களும், இந்தியாவில் இருந்து 32 பேரும்,
கட்டாரில் இருந்து 38 பேருமே இவ்வாறு இன்று நாட்டை வந்தடைந்தனர்.
இந்நிலையைில், இன்று காலை வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 470 பேருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.