தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மேல்மாகாணத்தில் இருந்து ஹட்டன், மாத்தறை, மட்டக்களப்பு, அம்பாறை, தங்காலை, யாழ்ப்பாணம்,நுவரேலியா நோக்கி சென்ற 460 பேர் பொது சுகாதார பரிசோதகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
$ads={2}
வெள்ளவத்தை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் சேவையாற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேல்மாகாணத்தில் இருந்துஅவ்வப்பகுதி நோக்கி சென்றவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.