ஜனாதிபதி அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் எடுப்பது நன்றல்ல! கரு ஜயசூரிய

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் எடுப்பது நன்றல்ல! கரு ஜயசூரிய

"பல பில்லியன் ரூபா செலவில் தேர்தல் நடாத்தி உருவாக்கப்பட்டும் நாடாளுமன்றம் ஒரு வருடத்தில் ஜனாதிபதியினால் கலைக்கப்படுமாயின், அதில் எந்தவித சாதாரண நிலையும் கிடையாது" என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் 21 மில்லியன் பிரஜைகளின் உரிமைகளை ஒரு நபரிடம் மாத்திரம் பெற்றுக்கொடுப்பது சாதாரண தன்மை உடையது இல்லை.

கோட்டாபய ராஜபக்ஷ தவறானவர், அவர் கொண்டுவரும் திட்டங்கள் முறையற்றது என நாங்கள் கூறவில்லை.

இந்த அதிகாரங்களை எதிர்காலத்தில் ஒரு தவறானவரிடம் கிடைக்குமாக இருந்தால் அது பாரிய பாதிப்பை ஏற்பட்டுத்தும். அந்தளவு பாரிய பிரச்சினைக்கு உரிய அதிகாரங்கள் இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இவ்வாறு பாரிய செலவில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கும் போது அதனை ஒரு வருடத்தில் அவர் கலைப்பது எந்த அளவிற்கு பொருத்தமானது” என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.