![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTpTX67Mv3clA_g0hgSHqMXlFvQajVIezDxFzro88JnHWdtE1-orUqzVBls_9pNLvMKFZjeQvYOA6tT9X9dWhFyREcrtAYo3Dv0zMWcUZi2QZqZ3vT9v_KeZuFcIZL9sOA-XHlziP3ouQ/s16000/sri-lanka.jpg)
நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், சேதமடைந்த வீடுகளை திருத்தியமைக்க 14 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.