நேற்று சத்தியப்பிரமாணம் செய்த மரண தண்டனை கைதி பிரேமலாலுக்கு மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களை போன்று சகல உரிமையும் உண்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று சத்தியப்பிரமாணம் செய்த மரண தண்டனை கைதி பிரேமலாலுக்கு மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களை போன்று சகல உரிமையும் உண்டு!


மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர தெரிவாகியுள்ளார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் அவருக்கும் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசியலமைப்பின் குறித்த சரத்தை சபையில் வாசித்துக் காட்டி சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர எதிர்க்கட்சியின் கடுமையான ஆட்சேபனைக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதனால் நேற்றைய அமர்வின்போது பிரேமலால் ஜயசேகரவின் பதவி பிரமாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கருப்பு பட்டியையும் அணிந்திருந்தனர்.

அத்தோடு, பாராளுமன்ற அமர்வில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.