ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அமர்­வு­க­ளுக்கு இனி சட்டத்தரணிகளுக்கும் கையடக்கத்தொலைபேசி தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அமர்­வு­க­ளுக்கு இனி சட்டத்தரணிகளுக்கும் கையடக்கத்தொலைபேசி தடை!


ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அமர்­வு­க­ளுக்கு இனிமேல் சட்­டத்­த­ர­ணி­களும் கைய­டக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்ல தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.


கடந்த வாரம் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் உதவிப் பொதுச் செய­லாளர் முர்ஷித் முளப்பர், சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கைய­டக்கத் தொலை­பே­சியை எடுத்துச் சென்று, ஞானசார தேரரின் சாட்­சி­யத்தை பதிவு செய்த விவ­கா­ரத்தைத் தொடர்ந்தே இத்­தடை அமுல்படுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­துடன்  குறித்த மௌல­விக்கும் அவ­ருக்கு உத­விய சட்டத்தரணிக்கும் எதி­ராக ஆணைக்­குழு சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்­ளது.


இதே­வேளை, இவ்­வி­வ­காரம் தொடர்பில் உலமா சபை பிரத்­தி­யே­க­மான விசா­ர­ணை­களை நடாத்தி வரு­வ­தா­கவும் உலமா சபையின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்தார். இச் சம்­பவம் உலமா சபைக்கு பெருத்த தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் குறித்த முக்­கி­யஸ்தர் மேலும் குறிப்­பிட்டார்.


மேலும், ஆணைக்­குழு விசா­ர­ணைகள் இடம்­பெறும் வளா­கத்தில் பாது­காப்பு பலப்படுத்தப்பட்­டுள்­ளது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.