வாள் வெட்டுக்குழு தலைவன் உட்பட சகா வாள் மற்றும் கைக்குண்டுகளுடன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாள் வெட்டுக்குழு தலைவன் உட்பட சகா வாள் மற்றும் கைக்குண்டுகளுடன் கைது!


மட்டக்களப்பில் வாள்வெட்டு குழுவின் தலைவன் என சந்தேகிக்கப்படும் 'தனு' உட்பட இருவரை வாள் மற்றும்  கைக்குண்டுடன்  கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்கேணி மற்றும் ஊறணி பகுதிகளில்  தொடர்ச்சியாக வாள்வெட்டு மற்றும் கஞ்சா விற்பனை உட்படலான பல்வேறு குற்றச் செயல்களில் இந்தக் குழுவினர் ஈடுபட்டு வந்துள்ளனர்.


இந்த நிலையில், பிரதேச மக்கள் இவர்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு அச்சமடைந்து வருவதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்று வந்துள்ளன. 


இந்நிலையில், புலனாய்வுத் துறையினருக்கு பொலிஸார் இந்த வாள்வெட்டு குழு தொடர்பில்  அறிவித்ததையடுத்து புலனாய்வுத்துறையினர் தொடர்ச்சியாக இவர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டி வந்துள்ளனர்.


இந்நிலையில், நேற்று (11) நாவற்கேணி பிரதேசத்தில் வாள் வெட்டுக்குழுவின் தலைவன் என சந்தேகிக்கப்படும் தனு என்பவர், வாளுடன் மக்களை அச்சுறுதி வருவதாக பொலிஸாருக்கு  தகவல் கிடைத்தது.


இதனையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.கே. ஹெட்டியாராச்சியின் ஆலோசனையில், பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் முகம்மட், பொலிஸ் சாஜன்ட் கிருபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் அங்கு சென்று சந்தே நபரைக் கைது செய்ய முற்பட்டபோது அவர் பொலிஸார் மீது வாளால் வெட்ட முற்பட்டபோது பொலிஸார் சுற்றிவளைத்து அவரையும் அவரது சகாவான சாந்தன் என்பவரையும்  கைது செய்ததுடன்   கைக்குண்டு, வாள் என்பவற்றையும் மீட்டுள்ளனர். 


இதேவேளை, அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சிறு குற்றப் பிரிவில் 4 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


யாழ் ஆவா வாள் குழு போன்று இவர்களும் இங்கு இயங்கி வருவதாகவும் இக்குழுவைச் சேர்ந்த மேலும் நால்வர் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் 


கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.