பஸ் மோதியதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ் மோதியதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் மரணம்!

நேற்று (01) இரவு அக்கரைப்பற்று பகுதியிலிருந்து
கொழும்பு நோக்கி பயணித்த
(மைக்ரோ) பஸ் ஒன்று காத்தான்குடியை
அண்மித்த தாழங்குடா பகுதியில் இரு
இளைஞர்கள் மீது மோதி
விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில்
இளைஞர்கள் இருவர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளனர்.

தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 மற்றும் 24
வயதுடைய இளைஞர்கள் இருவரே இந்த
சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமுற்ற
அப்பகுதி பொதுமக்களினால் குறித்த பஸ்
மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,
இதனால் பஸ் கடுமையான சேதங்களுக்கு
உள்ளாகியுள்ளது.

சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் தப்பி
சென்றுள்ள நிலையில் பொலிசார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.