மனைவியின் இறப்பினை தாங்கிகொள்ள முடியாமல் கணவன் தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனைவியின் இறப்பினை தாங்கிகொள்ள முடியாமல் கணவன் தற்கொலை!


நுவரெலியாவில் மனைவி உயிரிழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் கணவர் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.

ராகல பிரதேசத்தில் சீதா லட்சுமி என்ற அவரது மனைவி உயிரிழந்த சோகத்தில் வெள்ளையன் கருப்பையா என்ற 70 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த இருவரும் அந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். மனைவி சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டுள்ளார். அவரை பார்த்துக் கொண்ட கணவர் இவ்வாறான முடிவை எடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தம்பதியின் மகள் வெளிநாட்டில் தொழில் செய்து வருகின்றார் என விசாரனைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நோய் தீவிரமடைந்து மனைவி உயிரிழந்த நிலையில் அன்பாக பார்த்துக் கொண்ட கணவர் மனமுடைந்த நிலையில் விஷமருந்தியுள்ளார். அத்துடன், மனைவியின் கட்டில் மீது படுத்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.