பௌத்த மதத்தை காப்பதில் துட்டகைமுனுவிற்கு பிறகு ஜனாதிபதி கோட்டபயவே - உதய கம்மன்பில

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பௌத்த மதத்தை காப்பதில் துட்டகைமுனுவிற்கு பிறகு ஜனாதிபதி கோட்டபயவே - உதய கம்மன்பில


நான் பௌத்த சாசனத்தைக் காப்பாற்றவே வந்திருக்கிறேன் என்று பண்டைய காலத்தில் துட்டகைமுனு மன்னன் சொன்னதற்குப் பின்னர் இப்போது ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவே பகிரங்கமாக அந்த நிலைப்பாட்டை அறிவித்த தலைவர் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.

கி.மு 161 - 137 காலத்தில் இலங்கையை ஆண்டதாக மகாவம்சம் ஊடாக அறியப்படும் துட்டகைமுனு மன்னன் இலங்கையில் பௌத்தத்தை நிறுவி அதனைக் காப்பாற்றுவதே தனது தலையாய கடமையெனக் கூறியிருந்ததாகவும் அதன் பின்னர் இப்போது கோட்டாபே ராஜபக்சவே அவ்வாறு இயங்குவதாகவும் கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.

அந்த வகையில் தெவனகல உட்பட பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்ப தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தேவைப்பட்டால் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவர் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.