இத்தாலியில் முகக்கவசம் அணியாத இலங்கையர்களுக்கு இலட்ச ரூபா தண்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இத்தாலியில் முகக்கவசம் அணியாத இலங்கையர்களுக்கு இலட்ச ரூபா தண்டம்!


இத்தாலியில் இலங்கையர்கள் இருவருக்கு தலா 377 யூரோ என்ற கணக்கில் 754 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெறுமதியில் அது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.

இத்தாலி, பிரேஷியா நகரத்தில் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காலும் இருந்த இரண்டு இலங்கையர்களுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


$ads={1}

இந்த இலங்கையர்கள் இருவரும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதி பரிசோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளினால் வாகனம் நிறுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

அதில் ஒருவர் முகக் கவசம் வைத்திருந்த போதிலும் அதனை உரிய முறையில் அணியாமல் இருந்ததுடன் மற்றைய நபரிடம் முகக் கவசம் இல்லாதமையினாலும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.