நாடாளுமன்றை விட்டு வெளியேறிய அதாவுல்லா; உண்மையில் நடந்தது என்ன?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளுமன்றை விட்டு வெளியேறிய அதாவுல்லா; உண்மையில் நடந்தது என்ன?


20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு, நாடாளுமன்றிற்குள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.


இதனால் நாடாளுமன்றில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு, சபை நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.


அத்துடன் தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லா நாடாளுமன்றிலிருந்து வெளியேறினார்.


நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அதாவுல்லா அணிந்திருந்த உடை (மேலங்கியின் பொத்தான் அணியப்படாத நிலையில்) எந்த வகையிலும் பாராளுமன்ற கலாசாரத்திற்குப் பொருத்தமானதல்ல என்றும், இது நிலையியற் கட்டளைச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக சக உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தனர்.


$ads={2}


இதனை தொடர்ந்து அதாவுல்லா நாடாளுமன்றிலிருந்து தாம் வெளியேறுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார்.


இதனை எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்ததோடு, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.


குறித்த உடையினை அணிந்து நாடாளுமன்றிற்குள் பிரவேசிக்க முடியாது என தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் அவரை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றுமாறும் கோரினர்.


இதன் பின்னர் சபையிலிருந்து வெளியேறிய அதாவுல்லா, தாம் குறித்த ஆடை அணிந்தமைக்கான காரணத்தினையும் தெரிவித்ததோடு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது போன்ற உடையை அணிந்திருந்தார் எனவும், நினைவு கூர்ந்தார்.


அத்துடன் குளிர் காரணமாகவே தாம் அவ்வாறு ஆடை அணிந்ததாகவும் தெரிவித்தார்.


பின்னர் அவர் தனது மேலங்கியின் பொத்தானை சரி செய்த பின்னர் மீண்டும் பாராளுமன்றில் நுழைய அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.