ACJU அமைப்பின் முர்ஷித் மௌலவி தொடர்பான போலியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ACJU அமைப்பின் முர்ஷித் மௌலவி தொடர்பான போலியான தகவல்!

அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்குச் சென்றிருந்த நிலையில் சர்ச்சைக்குள்ளாகிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முன்னாள் பிரதித்தலைவர் அஷ்ஷெய்க் எம். முர்ஷித் அவர்களுக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட  போலியான தகவலுடன் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலாவருவதாக முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி கவலை தெரிவித்துள்ளார்.

தனது படத்தை இணைத்து தரக்குறைவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த படம் தொடர்பில் பொலிஸில் முறையிட்டுள்ளதாகவும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது குறித்து அவரிடம் சகோதர ஊடகம் ஒன்று வினவிய போது விளக்கமளித்திருந்தார்.

இது குறித்த மறுப்பைத் தனது உத்தியோகபூர்வ முகநூப் பக்கத்திலும் வெளியிட்டிருப்பதாகவும் வேண்டுமென்றே விசமத்தனமான செயல்களில் சமூகத்தார் ஈடுபடுவது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.