இலங்கையில் இன்றைய நாள் முடிவில் 39 பேருக்கு தொற்று! முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இன்றைய நாள் முடிவில் 39 பேருக்கு தொற்று! முழு விபரம்!

இலங்கையில் இன்றைய நாள் முடிவில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 12 பேருக்கும் குவைத்தில் இருந்து வருகை தந்த 06 பேருக்கும், கட்டாரில் இருந்து வந்த 16 பேருக்கும், மாலைத்தீவில் இருந்து வந்த 02 பேருக்கும், உக்ரேனில் இருந்து வந்த ஒருவருக்கும், இத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவருக்கும், இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,234 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, இலங்கையில் மேலும் 13 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன் அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,996 ஆக அதிகரித்துள்ளது.


மேலும், 226 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.