புதிய அரச கட்டிடங்கள் எதிர்வரும் 2 வருடங்களுக்கு இல்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய அரச கட்டிடங்கள் எதிர்வரும் 2 வருடங்களுக்கு இல்லை!


அமைக்கப்படவிருந்த அனைத்து அரச நிறுவன புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை எதிர்வரும் 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் அனைத்து இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கும் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள கட்டடங்கள் தொடர்பில் திறைசேரிக்கு அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கிக்கொள்ள முடியும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.