16 வருடங்கள் சம்பளம் இன்றி பணியாற்றும் ஆசிரியர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

16 வருடங்கள் சம்பளம் இன்றி பணியாற்றும் ஆசிரியர்!


தெற்கில் உள்ள மிகவும் ஏழ்மையான பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்திடம் எவ்வித சம்பளமும் பெறாமல் 16 வருடங்களாக தன்னார்வமாக கற்கும் ஆசிரியர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

மாத்தறை - தெனியாய பிரதேசத்திலேயே இந்த ஆசிரியர் கற்பிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

எம்.ஜீ.கமல் பிரசன்ன என இந்த ஆசிரியர் 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல் தொடர்ந்து 16 வருடங்களாக தன்னார்வமாக அவர் பணியாற்றி வருகின்றார்.

பௌத்தம், சித்திரம், வரலாறு, விவசாயம் போன்ற பாடங்களை அவர் கற்பித்து வருகின்றார். பாடசாலை சித்திகளை அதிகரிப்பதற்காக அவர் பாரிய உதவிகளை அவர் செய்த வருகின்றார்.

காலில் உபாதையுடன் வாழும் அவர் தனது சேவைக்கு உபாதையை ஒரு தடையாக கருதாமல் மாணவர்களுக்காக மிகப்பெரிய சேவையை அவர் செய்து வருகின்றார்.

பல்வேறு தகுதிகளை கொண்ட அவருக்கு இதுவரையிலும் எவ்வித நிரந்தர தொழிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தனது 16 வருட சேவையை கருத்திற் கொண்டு குறித்த பாடசாலையில் தனது நிரந்தர ஆசிரியர் பதவியை பெற்றுக் கொடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.