மாவனல்லை பகுதியில் 14 வயது சிறுமி கழிப்பறையில் விழுந்து மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாவனல்லை பகுதியில் 14 வயது சிறுமி கழிப்பறையில் விழுந்து மரணம்!


மாவனல்லை, கனேதென்ன - உதயமாவத்தை பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய சிறுமியொருவர் கழிப்பறை குழியொன்றில் வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.


இன்று (27) காலை 9.00 மணியளவில் குறித்த சிறுமி வீட்டு முற்றத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூடிய கழிப்பறை குழியின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொங்ரீட் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுமியும் உள்ளே வீழ்ந்துள்ளார்.


இதன்போது, பதட்டமடைந்த சிறுமியின் தாய் காப்பாற்ற முயன்றுள்ளார். பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். எadsவ்வாறாயினும், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


$ads={2}


இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவனல்லை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.