திருமணத்திற்காக ஆக குறைந்த வயது நிர்ணயம் குறித்து நாடாளுமன்றில் முன்வைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமணத்திற்காக ஆக குறைந்த வயது நிர்ணயம் குறித்து நாடாளுமன்றில் முன்வைப்பு!

இலங்கையில் திருமணத்துக்கான ஆகக்குறைந்த அகவையை 18 வயதாக நிர்ணயிக்கும் யோசனை ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார இந்த யோசனையை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் கையளித்தார்.

திருமணத்துக்கான ஆகக்குறைந்த அகவை என்ற தலைப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிள்ளைகளினதும் உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் அமுல் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று பிரமித்த பண்டார தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் சிறுவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த யோசனையின் நோக்கமாகும். எனினும் யாரையும் ஓரங்கட்டுவதற்காக இது கொண்டு வரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த யோசனையின்படி ஆண்,பெண் இரண்டு தரப்பினரும் 18 அகவையை பூர்த்தி செய்த பின்னரே திருமணம் செய்து கொள்ளமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குழந்தை திருமணம் தொடர்பில் நீதிமன்றத்தின் திருமண ரத்து தொடர்பாகவும் இந்த யோசனையில் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.