மிதக்கும் சந்தையை நவம்பரில் பொதுமக்களின் பாவனைக்கு ஒப்படைக்க நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிதக்கும் சந்தையை நவம்பரில் பொதுமக்களின் பாவனைக்கு ஒப்படைக்க நடவடிக்கை!

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மிதக்கும் சந்தையை புனர்நிர்மாணம் செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் மக்களின் பாவனைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு மிதக்கும் சந்தைத் தொகுதியை பார்வையிடுவதற்காகவும் அதனை நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கிலும், நகர அபிவிருத்தி, கரையோரப்‌ பாதுகாப்பு, கழிவுப்பொருள்‌ அகற்றுகை மற்றும்‌ சமுதாய தூய்மைப்படுத்தல்‌ இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர்.

இந்த திட்டம், அப்போதைய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

இத்திட்டத்திற்காக ரூபா 312 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. முறையாக பராமரிக்கப்படாமல் காணப்பட்ட இதனை மீண்டும் நவீன மயப்படுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டத்தின் மூல திட்டத்திற்கு அமைய, எஞ்சியுள்ள திட்டத்தை மிக விரைவாக பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.