முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்!

முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி வைத்தியசாலையில் கடந்த 10ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூளையில் எர்பட்டிருந்த கட்டியை அகற்ற சத்திர சிகிச்சை செய்ததை தொடர்ந்து அவர் கோமா நிலையை அடைந்தார்.

அவருக்கு கொரோனா பாதிப்பும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது.

இன்று (31) காலை இராணுவ வைத்தியசாலை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். இந்த ஆபத்தான நிலையில் இருந்து அவர் மீண்டு வருவதற்காக, மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில், வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார்.’ என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி தனது 84 ஆவது வயத்தில் இன்று காலமானார். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.