
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.59 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடற்பரப்பில் இருந்து 163 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
எனினும் இந்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லையென தேசிய இலங்கை சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நில அதிர்வு காரணமாக இலங்கைக்கு எவ்வித ஆபத்துக்களும் இல்லை எனவும் கடலுக்கு அருகில் வாழும் மக்கள் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.