பிரதமரின் உறவினரொருவரின் பாராளுமன்ற அந்தஸ்திற்காக பதவி விலகும் முக்கிய நபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமரின் உறவினரொருவரின் பாராளுமன்ற அந்தஸ்திற்காக பதவி விலகும் முக்கிய நபர்!


ராஜபக்சக்களின் உறவினரான உதித்த லொக்கு பண்டார விரைவில் பாராளுமன்றம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினரொருவர் பதவி துறக்கவுள்ளார் எனவும், அவர் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் அரச உயர்மட்ட பிரமுகர் கூறியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட உதித்த லொக்கு பண்டார விருப்பு வாக்கு பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கின்றார்.

எனினும், மொட்டு கட்சிக்கு 6 ஆசனங்களே கிடைக்கப்பெற்றன. எனவே, எம். பியொருவர் பதவி துறந்தால் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவருக்கு சபைக்கு வருவதற்கான வாய்ப்பு கிட்டும்.

இதேவேளை ஊவா உட்பட 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அரசாங்கம் அதற்கான நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.