தனிமைப்படுத்தல் நிலையத்தில் குழந்தை பிரசவித்த தாய்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் நிலையத்தில் குழந்தை பிரசவித்த தாய்!

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.

நேற்றைய தினம் மிகவும் ஆரோக்கியமாக குழந்தை பிறந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் 7ஆம் திகதி சவுதி அரேபியாவில் இருந்து வந்த அந்த பெண் யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது குழந்தை பிரசவிக்கும் நாள் நெருங்கும் போது அதிகாரிகள் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு வைத்தியர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் குழந்தையை பிரசவித்துள்ளனர்.

தற்போது தாயும் குழந்தையும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.