தேசிய பட்டியலில் இருந்து விலகுவதாக நானே அறிவித்தேன். முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய பட்டியலில் இருந்து விலகுவதாக நானே அறிவித்தேன். முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான் தெரிவிப்பு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் திலகரத்ன தில்ஷான், கடந்த மாத தொடக்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய பட்டியலில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.


தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட SLPP களின் 17 உறுப்பினர் தேசிய பட்டியலில் தில்ஷனின் பெயர் சேர்க்கப்படவில்லை.


இந்நிலையில் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அவர், தேசிய பட்டியலில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ஷவிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியதாக கூறினார்.


"என்னை விட தகுதியான ஒருவருக்கு எனக்காக ஒதுக்கப்படவிருந்த ஆசனம் செல்ல வேண்டும் என நான் உணர்ந்தேன். நான் கிரிக்கெட் விளையாடுவதில் அதிக நேரம் செலவிட்டேன், எனவே இப்போது எனது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட விரும்புகிறேன். எனவே இந் நேரத்தில் முழுமையான அரசியலில் நுழையாமல் இருப்பதே சிறந்த முடிவு என நான் நினைத்தேன்.” என்றார்.


"ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரச்சாரத்தில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய நாட்டை வழிநடத்துகிறார் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று டில்ஷான் மேலும் கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.