
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 11 நாட்களின் பின்னர் நீர்கொழும்பு காவல்துறை விசாரணை குழுவில் இன்று (02) சரணடைந்தத நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தி கொடுத்தமை தொடர்பில் அவர் உள்ளிட்ட 04 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கமைய அவர்களை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றால் கடந்த 22 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதற்கமைய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 3 அதிகாரிகள் இதற்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ள நிலையில் தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் என சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது.