கைது செய்யப்பட்ட அனுருத்த சம்பாயோ குற்றப்புலனாய்வுத்துறையிடம் முன்னிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைது செய்யப்பட்ட அனுருத்த சம்பாயோ குற்றப்புலனாய்வுத்துறையிடம் முன்னிலை!

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ குருநாகல் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 11 நாட்களின் பின்னர் நீர்கொழும்பு காவல்துறை விசாரணை குழுவில் இன்று (02) சரணடைந்தத நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தி கொடுத்தமை தொடர்பில் அவர் உள்ளிட்ட 04 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கமைய அவர்களை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றால் கடந்த 22 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமைய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 3 அதிகாரிகள் இதற்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ள நிலையில் தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் என சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.