ரிஷாடின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாடின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான தடை உத்தரவு விதிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

புவனேக அலுவிஹாரே, எல்.டீ.பீ தெஹிதெனிய, எஸ். துரைராஜா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி, குறித்த மனு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிபதி பிரியந்த ஜயவர்தன தனிப்பட்ட காரணங்களை முன்னிட்டு அதிலிருந்து விலகியிருந்தார்.

எனவே, இம்மனு மீதான விசாரணையை இன்று வரை ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.