கைலாசம் செல்ல தயாராகும் சர்ச்சைக்குரிய நடிகை மீரா மிதுன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைலாசம் செல்ல தயாராகும் சர்ச்சைக்குரிய நடிகை மீரா மிதுன்!

பாலியல் பலாத்காரம் மற்றும் ஆட் கடத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தலைமறைவாகியுள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு செல்ல விரும்புவதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன்  மூலம் பிரபலமானார்.

இதனையடுத்து சமூக வலைத்தளத்தில்  சர்ச்சையான கருத்துக்களைப் பதிவிட்டு வரும் அவர் அண்மையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி  நடிகர்களான  விஜய்  மற்றும் சூர்யாவின் குடும்பத்தினரைத் தகாத வார்த்தைகளால் சாடி பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவர் மீது  பொலிஸ் நிலையத்தில்  புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல், அவரது உருவ பொம்மையையும் எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக    கைலாச நாட்டின் நாணயத்தை வெளியிட்ட நித்யானந்தாவை பாராட்டி, மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றையிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அனைவரும்  நித்யானந்தாவைக் கேலி செய்தார்கள், அனைவரும் அவரை தவறாக பேசினார்கள்.

அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தார்கள். அனைத்து ஊடகங்களும் அவருக்கு எதிராக இருந்தன. ஆனால் அவரோ கைலாசா எனும் புதிய நாட்டையே உருவாக்கியுள்ளார். விரைவில் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.