5,000 ரூபா கொடுப்பனவு மீள பெறப்படமாட்டாது! பிரதமர் உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

5,000 ரூபா கொடுப்பனவு மீள பெறப்படமாட்டாது! பிரதமர் உறுதி!

Yazh News Mahinda
கொரோனா நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு மீள அறவிடப்பட மாட்டாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

சூரியவௌ பகுதியில் இன்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"யுத்தத்தினை நிறைவு செய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். ஹம்பாந்தோட்டையில் பாரிய அபிவிருத்தியை முன்னெடுத்தோம். அங்கு சர்வதேச விளையாட்டு மைதானத்தையும் அமைத்தோம். அத்துடன் சூரியவௌ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தாம் அமைத்தோம் என்பதற்காக கடந்த 5 வருடங்களாக அதில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை."

அத்துடன் அண்மையில் வழங்கப்பட்ட 5,000 ரூபாவை எந்த காரணத்திற்காகவும் மக்களிடம் இருந்து மீளப்பெறப்பட மாட்டாது எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.