அதனடிப்படையில் விஞ்ஞானம், வணிகம், முகாமைத்துவம் மற்றும் தொழிநுட்ப பீடங்களின் நான்காம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பீடங்களின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மாத்திரம் விடுதி வசதி வழங்கப்படுவதாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதிக்குள் விடுதிகளுக்கு வருகை தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் வீடுகளில் இருந்து வருகை தர முடியுமானவர்கள் விடுதிகளில் தங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.