சட்டவிரோதமான சொத்துக்களை விசாரிக்க விசேட குற்றப்புலனாய்வு பிரிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமான சொத்துக்களை விசாரிக்க விசேட குற்றப்புலனாய்வு பிரிவு!

சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவின் கீழ் ‘தனி சிறப்பு சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு’ ஒன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவின் கீழே இந்த பிரிவு செயற்படும் என்றும் குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கீழ் ஸ்தாபிக்கப்படும் இந்த விசாரணை பிரிவில் செய்றபடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விரைவில் இதனை ஸ்தாபிப்பதுடன், சட்டவிரோதமான முறையில் வைத்திருக்கும் சொத்துகள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை அரசுடைமையாக்குவது மாத்திரமின்றி, அதனை எவ்வாறான முறையில் அரசுடைமையாக்குவது என்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.