விசாரணைகளில் மேலும் தெரிய வருவதாவது, இலங்கை கிரிக்கெட் சபை ஊழியர் ஒருவரின் திருமணம் ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
தமது நண்பர்கள் அனைவரும் குடி போதையில் இருந்ததால், தான் மட்டும் மது அருந்தாத காரணத்தால் வாகனத்தை செலுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் தான் விபத்து ஏற்பட்ட சமயம் சோர்வடைந்து உறங்கிவிட்டதாகவும் அதன்காரணமாகவே வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளது என தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து அவர்மீது ஏற்கனவே சந்தேகிக்கப்பட்ட குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றம் விடுவிக்கப்பட்டு விபத்து நடந்ததைத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.