இன்று 10 பேர் அடையாளம்; முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று 10 பேர் அடையாளம்; முழு விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் 05 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி, அவர்களின் விபரம் கீழ்கண்டவாறு பதிவாகியுள்ளது.

இராஜாங்கனையில், தான வீடொன்றில் கூடிய 139 பேருக்கு மேற்கொண்ட PCR சோதனையில் 12 வயது சிறுவன், இந்தியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர், கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய தொற்றாளர்களுடன் தொடர்புடைய கம்பஹாவில் வசிக்கும் 02 பேர், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் 03 பேர், சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெறும் 03 பேர் என மொத்தமாக 10 பேர் இன்று பதிவாகியுள்ளது.
$ads={1}
இன்று (17) இரவு 9.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,697 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,012 ஆக காணப்படுகின்றது.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 950 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 906 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர். குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 899 ஆக காணப்படுகின்றது. உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றிய மேலும் 07 கடற்படையினர் மாத்திரம் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2,697 பேரில் தற்போது 674 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இது வரை 2,012 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 99 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
$ads={1}

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.