
நேற்றிரவு (23) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
பதுளையில் இடம்பெற்ற திருமண விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் வந்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காரினை செலுத்தி வந்த நபர் குடிபோதையில் இருந்துள்ள நிலையில், காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதால் மின் கம்பம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயடைந்த இரண்டு மகள்களும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் யக்கல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்து அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

