உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை - உலக சுகாதார அமைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பில்லை - உலக சுகாதார அமைப்பு!

பொது சுகாதார வழிகாட்டல் பின்பற்றாவிட்டால் கொரோனா தொற்றுநோய் நெருக்கடி மேலும் மிக மோசமானதாக மாறும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் பல நாடுகள் தொடர்ந்தும் கடுமையாக போராடி வரும் நிலையில் நெருக்கடியில் இருந்து உலகம் துரித கதியில் மீளும் சாத்தியம் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானொம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் இருந்தவாறு நேரலையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


ஐரோப்பா, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது இருக்கும் நிலைமையை விட படுமோசமான உச்சக்கட்ட அழிவை ஏற்படுத்தும். இந்த நிலை நீடித்தால் உலகம் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப முடியாது என்பதே வெளிப்படையான உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.