பல தொழிலாளர்களிடம் பண மோசடி ; ஐவர் கைது!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல தொழிலாளர்களிடம் பண மோசடி ; ஐவர் கைது!!!

இணையத்தளத்தினூடாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் கடன்கள் வழங்கப்படும் என்று கூறி, அவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக ஐவர் கிருலபன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 30, 39, 38 மற்றும் 46 வயதுடைய பிட்டபத்தர, நாரஹேன்பிட்ட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடம் இருந்து மடிக்கணிணி, வங்கி அட்டைகள், லெமினேட் இயந்திரம், போலி ரபர் ஸ்டேம், போலி சாரதி அனுமதி பத்திரங்கள், அதற்காக பயன்படுத்தும் அட்டைகள் மற்றும் சர்வதேச சாரதி அனுமதி பத்திரங்கள், மோசடிக்கு பயன்படுத்திய கார் மற்றும் வேனையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலபனை பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில் கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.