கொழும்பில் கொரோனா பரவல் தொடர்பான உண்மை நிலவரம் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் கொரோனா பரவல் தொடர்பான உண்மை நிலவரம் !

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் நுகேகொட, கொழும்பு மற்றும் அவிசாவளை பகுதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி குறித்த செய்திகள் வெறும் வதந்தியே என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த உண்மை நிலவரத்தை சுகாதார சேவைப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், தங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு பிரிவு உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அந்த நபர் கடந்த ஜுலை மாதம் 5ஆம் திகதி விடுமுறை பெற்று கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து பேருந்து ஒன்றில் கொழும்பிற்கு வருகை தந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக மாத்தறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.