வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் அங்குள்ள கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பி.சீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனையடுத்து வெலிக்கடை சிறைக்கு எவரும் மறு அறிவித்தல் வரை அனுமதிக்கப்படமாட்டர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே இன்று நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளுக்குள் கைதிகளை பார்க்க செல்வோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.