கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலைமையினை அரசாங்கம் மறைக்கின்றது- அனுரகுமார

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலைமையினை அரசாங்கம் மறைக்கின்றது- அனுரகுமார

அரசாங்கம் கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைநிலையை மக்களிடமிருந்து மறைக்கின்றது என தேசிய மக்கள்சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது என காண்பித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக அரசாங்கம் உண்மையை மறைக்கின்றது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நிலைமையின் பாரதூரமான தன்மையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன மக்கள் சுகாதார விதிமுறைகளை மறந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.


சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கம் இணைந்து கொரோனா வைரசினை கட்டுப்படுத்திய போதிலும் சமூகத்தில் அளவுக்கதிகமான நடவடிக்கைகளை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த பல நடவடிக்கைகளால் நிலைமை மேலும் மோசமானதாக மாறியுள்ளதுஎன ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளை விட குணமடைந்த நோயாளிகளையே அரசாங்கம் காண்பிக்க முயல்கின்றது என குற்றம்சாட்டியுள்ள அவர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் கொவிட் 19 சோதனை அறிக்கைகளில் அரசாங்கம் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதால் பல்கலைகழகம் பிசிஆர் சோதனைகளில் இருந்து விலகியுள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த உண்மை நிலைiயை மறைப்பதற்காக இவை அனைத்தையும் அரசாங்கம் செய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.