ஒரே பிரவசத்தில் இரு யானைக் குட்டிகள் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே பிரவசத்தில் இரு யானைக் குட்டிகள் !

மின்னேரியா தேசிய பூங்காவிலுள்ள யானை ஒன்று இரண்டு குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்றுள்ளது. இதனால் இலங்கையில் உள்ள வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுவே இலங்கையில் யானை ஒன்று ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்ற முதல் தடவையாகும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.

குறித்த குட்டிகள் பிறந்து மூன்று அல்லது நான்கு வாரங்களே இருக்குமெனவும் மின்னேரியா பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு, முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் மதுரு ஓயாவின் அருகே ஒரே பிரசவத்தில் ஈன்ற இரண்டு இரட்டை யானைகள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் அவை பிறக்கும்போதே இறந்துவிட்டனஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.