கிறீஸ் மற்றும் எண்ணெயை அகற்ற பயன்படுத்தும் காலாவதியான ஜெல் வகை ஒன்றில் ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி மற்றும் புதினா ஆகியவற்றின் வண்ணங்கள் மற்றும் நறுமணங்கள் சேர்க்கப்பட்டு இந்த ஹேன்ட் சானிடைஷர் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது சந்தைக்கு மீண்டும் ஹேன்ட் சானிடைஷர்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவை பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தயாரிப்பு துவங்கப்பட்டுள்ளது என CAA இயக்குனர் அசேல பண்டார குறிப்பிட்டார்.
10,000 லீட்டர் எடை கொண்ட சுமார் 50 லட்சம் பெறுமதியான தயாரிப்புகளுடன், சந்தேக நபர்கள் கடுவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இத்தகைய தரமற்ற தயாரிப்புகள் குறித்து நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு 1977 எனும் இலக்கத்தில் தெரிவிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.