இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர்கள் இருவருக்கு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட பின்னர், கலாநிதி ராணி ஜயமஹ மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரை மத்திய வங்கியின் நாணய சபைக்கு நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.